தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் சித்தியடைந்தவர்களுக்கு புலமைப்பரிசில்கள் உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் சேவையாற்றும் ஊழியர்களது பிள்ளைகளுக்கு , அதிகார சபையின் நலன்புரிச் சங்கத்தின் அனுசரனையில் க.பொ.த.உயர்தரம், சாதாரண தரம் மற்றும் 5 ஆம் ஆண்டுப் புலமைப்பரிசில் சித்தியடைந்தவர்களுக்கு புலமைப்பரிசில்கள் உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு 03.05.2023 கொழும்பு தலைமைக்கரியாலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ரஜிவ் சூரியராச்சி அவர்களின் தலைமையில் மாணவர்கள் தமது பாடசாலை மற்றும் பல்கழைகக்கழக கல்வியைத் தொடர்வதற்காக மாதாந்த உதவித் தொகைகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.

இத் திட்டத்திற்காக அதிகார சபையின் தலைவர் இவ்வருடம் மேலும் 2.5 மில்லியன் ருபாவினை ஊழியர்களது புலமைப்பரிசில் திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
இந் நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உப தலைவர், பணிப்பாளர்கள், பொது முகாமையாளர் பொறியியலாளர் ஜானக்கவும் அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :