போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது உறவுகளை பாதுகாப்போம் -கருத்தரங்கு



பாறுக் ஷிஹான்-
போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது உறவுகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது.

இக்கருத்தரங்கு நேற்று (4) அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அல்-அமானா சமூக சேவை அமைப்பின் தலைவருமான எம்.வி நவாஸ் தலைமையுரையுடன் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் ,சிரேஷ்ட சட்டத்தரணியும் கல்முனை காதி நீதவானுமான எப்.​​எம்.அமீருல் அன்சார் மௌலானா, சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டீ.எம்.எஸ்.கே தசநாயக்க ,பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல்.அப்துல் கபூர் ,சவளக்கடை பொலிஸ் நிலைய பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான ஏ.எம் ஜவ்பர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மேலும் அதிகளவான பெண்கள் கலந்து கொண்ட இப்போதை ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக திறமையாக செயற்பட்டு கொரோனா அனர்த்தம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் செயற்பாடுகள் உள்ளிட்ட இடர் காலங்களில் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி தற்போது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக திறமையாக செயற்பட்டு வருகின்ற ரம்சீன் பக்கீருக்கு நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அல்-அமானா சமூக சேவை அமைப்பின் தலைவருமான எம்.வி நவாஸ், தலைமையில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஏ.நபீர், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் இளைஞர் குழு தலைவர் எஸ்.சஹாப்தீன், ரீ.எம் றிபாஸ் ஆகியோரினால் பொன்னாடை போர்த்தப்பட்டு உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.

மேலும் இக்கலந்துரையாடலில் போதைப்பொருளின் தாக்கங்கள் , போதைப்பொருளை தடுப்பது எவ்வாறு, போதைப்பொருள் பொருளாதாரத்தை எவ்வாறு சீரழிக்கின்றது, போதைப்பொருளை எவ்வாறு தடுக்கலாம் ,உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அதிதிகள் உரைகளை நிகழ்த்தினர்.

இறுதியாக சமூகப்பிரச்சினை ,போதைவஸ்து பாவனை ,துஸ்பிரயோகங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பெண்கள் அமைப்புகளுக்கு அதிதிகளினால் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டு நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :