கடவுச்சீட்டுக்கு விரல் அடையாளம் பெறும் நடவடிக்கை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று முதல் ஆரம்பம்!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
டவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் பதிவு செய்யும் பணி நேற்று (21) காலை 8.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.இந்த நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் நடைபெற்றது.

நாடளாவிய ரீதியிலுள்ள 51 பிராந்திய செயலகங்களில் கடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்கான விரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச செயலகங்கள் கடவுச் சீட்டு பெற்றுக் கொள்வதற்கான கைரேகை எடுக்கும் பிரதேச செயலகங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பிரதேச செயலகங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 765 பேர் கைரேகைகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :