அந்-நூர் மகா வித்தியாலய மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு: பாடசாலை சமூகம் பாராட்டு



றியாஸ் ஆதம்-
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியில் அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான கணித ஒலிம்பியாட் (Olympiad) போட்டி அண்மையில் இடம்பெற்றது. மேற்குறித்த போட்டி நிகழ்ச்சியில் அந்-நூர் மகா வித்தியாலயம் சார்பாக கலந்துகொண்ட ஜே.இஸ்ஸத் பானு, எம்.எம்.அஹமட் ஆகியோர் கூடிய புள்ளிகளை பெற்றுக்கொண்டனர்.

குறித்த போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிகூடிய புள்ளிகளுடன் வெற்றிபெற்று தமது வலயத்திற்கும் பாடசாலைக்கும், பெருமை சேர்த்த மாணவர்களுக்கு பாடசாலை சமூகத்தினர் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றனர்.

மேற்படி மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள், பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :