கனரக வாகனமொன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஸ்தலத்திலே இருவர் பலி.



எப்.முபாரக்-
திருகோணமலை கண்டி பிரதான வீதியில் கனரக வாகனமொன்றுடன் வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஸ்தலத்திலே இருவர் பலியாகியுள்ளதாக ஹபரன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று (6)காலை அலுத்ஒயா, சிங்ககம பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து கிண்ணியாவுக்குச் சென்ற வேன் ஒன்றும், திருகோணமலையிலிருந்து கொழும்புக்குச் சீமேந்து மூடைகளை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் கிண்ணியா பகுதியைச் 45 மற்றும் 47 வயதுடைய இருவரே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேனில் பயணித்த மற்றொருவர் பலத்த காயங்களுடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனரக வாகனத்தின் சாரதிக்கும்,உதவியாளரும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிக வேகமும் சாரதிக்கான நித்திரை கலக்கமுமே விபத்துக்கான காரணம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :