பத்திரகாளி அம்பாளின் தீமிதிப்பு மகோற்சவம்!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் எதிர்வரும் 14ஆம் தேதி புதன்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகும்.

தொடர்ச்சியாக 10 நாட்கள் சடங்குகள் இடம்பெற்று 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை தீமிதிப்பு வைபவம் பிரதம பூசகர் குமாரகுலசிங்கம் லோகேஷ் தலைமையிலே சடங்கு நடைபெறும்.

பூஜைகள் தினமும் பகல் 12 30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடம் பெறும் என்று ஆலய பரிபாலன சபையின் செயலாளர் மா.கணேசலிங்கம் தெரிவித்தார்.

16ஆம் தேதி காலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம் பெறும். 20ஆம் தேதி இரவு அம்மன் முத்துச்சப்ரத்திலே ஊர்வலம் வருகின்ற நிகழ்வு இடம்பெறும். 23ஆம் தேதி காலையில் மஞ்சள் குளித்து தீமிதிப்பு இடம்பெறும். பகல் அன்னதானம் இடம் பெறும் என செயலாளர் கணேசலிங்கம் மேலும் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :