அறநெறி பாடசாலைக்குச் சீருடை வழங்கல்..!



ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்டம் அலஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறிப் பாடசாலை மாணவருக்குச் சீருடை வழங்கும் பொருட்டாகத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் 230000.00 ரூபா நன்கொடையாக வழங்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் இதற்கான காசோலையை மேற்படி அறநெறிப் பள்ளித் தலைவர் சுந்தரலிங்கம் அவர்களிடம் வழங்கி வைத்தார்.

தமிழ்ப் பண்பாடு மற்றும் சைவநெறியைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கோடு செயற்பட்டு வரும் அறநெறிப் பாடசாலைகளில் அலஸ்தோட்டம் நாகம்மாள் அறநெறிப் பள்ளி முதன்மையான தொன்றாகும். இந்த அறநெறிப் பள்ளியில் 125 மாணவர் கல்வி பயில்கின்றனர். இவர்களுக்குச் சீருடை இல்லாத குறையை நீக்கும் பொருட்டாகத் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் சீருடை கொள்வனவுக்காக 230000.00 ரூபாவை நேற்று முன்தினம்  (18.06.2023) நாகம்மாள் அறநெறிப் பள்ளிக்கு வழங்கியது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் இதற்கான காசோலையை மேற்படி அறநெறிப் பள்ளித் தலைவர் சுந்தரலிங்கம் அவர்களிடம் வழங்கி வைத்தார். குச்சவெளியைச் சேர்ந்த திருச்செல்வம் பிரபாகரன் நினைவாக இதற்கான அனுசரணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :