நாளை முதல் கடவுச்சீட்டுகளுக்கு Online-இல் விண்ணப்பிக்கலாம்



டவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள Online ஊடாக விண்ணப்பிக்கும் செயற்றிட்டம் நாளை (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 52 பிரதேச செயலகங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய கூறினார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.immigration.gov.lk/ எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தேவையான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

மூன்று நாள் சேவை மற்றும் சாதாரண சேவைக்கமைய, கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சாதாரண சேவைக்கு 5000 ரூபாவும், மூன்று நாள் சேவைக்கு 15,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :