108 டெங்கு நோயாளர்கள் உயிரிழப்பின்றி காப்பாற்றப்பட்டனர்!



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஆறு மாதங்களில் அனுமதிக்கப்பட்ட 108 டெங்கு நோயாளிகளும் எவ்வித உயிரிழப்பு மின்றி காப்பாற்றப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா முரளீஸ்வரனின் சிறந்த நிருவாகத்தின் கீழ் நோயாளர்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுபப்படுவதுஅனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் கடந்த ஆறு மாத காலத்தில் வைத்தியசாலைக்கு வருகை தந்த பல்வேறு தொற்று நோயாளர்கள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

டெங்கு நோயாளர்கள் (Dengue) 108 , எலிக்காய்ச்சல் நோயாளர்கள் (leptospirosis) 04, வயிற்றுப்போக்கு நோயாளர்கள் (Dysentert) 10, மூளைக்காய்ச்சல் நோயாளர்கள் (Meningitis) 03, சின்னம்மை நோயாளர்கள் (Measles)05, கொப்பளிப்பான் நோயாளர்கள் (Chicken pox) 13, காச நோய் நோயாளர்கள் (Tuberculosis) 15 பேருக்கும் சிறந்த முறையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எந்த ஒரு டெங்கு நோயாளர்களுக்கும் உயிராபத்துக்கள் ஏற்படாமல் பராமரிப்புகள் வழங்கப்பட்டு குணமடைந்து வீடு சென்றமை இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும் என்று தொற்று கட்டுப்பாட்டு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :