நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் 4 ஓட்டங்களினால் வெற்றி




அஸ்ஹர் இப்றாஹிம்-
ஸ்டன் பிரிமியர் லீக் சம்பியன் கிண்ண கிறிக்கட் சுற்றுப் போட்டியின் கால் இறுதிப் போட்டியில் நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் 4 ஓட்டங்களினால் வெற்றிபெற்று அரை இறுதிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றுள்ளது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி காலிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்களில் 2 வீக்கட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் நிஸ்கி அஹமட் 31 ஓட்டங்களையும், மிப்ராஸ் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 10 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 76 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

போட்டியின் ஆட்ட நாயகனாக நிந்தவூர் இம்ரான் விளையாட்டுக் கழக வீரர் நிஸ்கி அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.

காலிறுப் போட்டியின் போது 3 சிறப்பான பிடியெடுப்புகளை நிகழ்த்திய இளம் வீரர் அரபாத் அஹமட் ஆட்ட நாயகன் நிஸ்கி அஹமட் அவர்களினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :