கடலலையின் சீற்றத்தினால் காவு கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் சாய்ந்தமருது கடற்கரை பூங்கா சுற்றுமதில்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிரதேசத்தில் அண்மைக்காலமாக நிகழும் கடல் சீற்றத்தினால் ஏற்பட்டுள்ள அலையின் தாக்கம் காரணமாக கடற்கரையோரம் பாரிய கடலரிப்புக்குள்ளாகி வருகின்றது

மருதமுனை,பாண்டிருப்பு, கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தவூர் மற்றும் அட்டப்பள்ளம் போன்ற பிரதேசங்கள் கடரிப்பினால் தினசரி காவு கொள்ளப்பட்டு வருகின்றது.

கடலையே தமது ஜீவனோபாயமாக கொண்டுள்ள மீனவர்களும் அவர்களது மீன்பிடி தளங்களும்,மீன்பிடி உபகரணங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

தமது தோணிகள் ,மீன்பிடி படகுகளை தரித்து வைப்பதற்கோ இடமின்றி மிகவும் கஸ்டமான நிலமையை மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதே வேளை சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள கடற்கரை பூங்காவின் சுற்றுமதிலும் பாரிய கடரிப்பினால் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த நிலமை தொடருமானால் கடற்கரை பிரதேசமொன்று இப்பகுதியிலிருந்து இல்லாமல் போனாலும் போகலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :