இந்திய நாட்டினுடைய சர்வதேச விருதுக்கு இலங்கையிலிருந்து சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.எம்.ரோஷன் தெரிவு



அஸ்ஹர் இப்றாஹிம்-
லக அளவில் உள்ள இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது.

இதில் பல் துறை சார்ந்த பல சாதனையாளர்கள் உலக அளவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர். இவ்விருதில் ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பினுடைய நிர்வாக குழு உறுப்பினரும் கலைப்பட்டதாரியமான ஏ.எம்.ரோஷன் அவர்களும் இலங்கை நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொள்கின்ற இருவரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எம்.ரோஷன் இலங்கையில் மாத்திரமன்றி ஊடகத் துறைக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்த ஒருவர் என்பதுடன் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :