ரஹ்மத் மன்சூரினால் இஸ்லாமாபாத் ஜூம்ஆ பள்ளிவாசலில் குடி நீர்த்தொகுதி திறந்து வைப்பு



எம். என்.எம்.அப்ராஸ்-
ம்பாரை மாவட்டம் கல்முனை இஸ்லாமாபாத் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலின் நலன் கருதி,பள்ளி நிருவாகிகள் குடிநீர் மற்றும் வுழு செய்வதற்கான நீர்த்தொகுதி அமைப்பு ஒன்றை அமைத்துத் தருமாறு ரஹ்மத் பவுண்டேஷனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய வை.டப்ளியு.எம்.ஏ(YWMA)பேரவையின் அனுசரணையில் அமைக்கப்பட்ட குடிநீர் மற்றும் வுழு செய்வதற்கான நீர்த்தொகுதி,ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும்,
கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகரும்,
கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் புதிதாக பள்ளிவாசலில் அமைக்கப்பட்ட குறித்த குடி நீர் தொகுதி அமைப்பினை பள்ளி நிருவாகிகளிடம் கையளித்து திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் எம்.ஐ.எம்.ஹுஸைன்,செயலாளர் எம்.சீ.எச்.முஹைதீன், பொருலாளர் மௌலவி எம்.எச்.அப்துல் அஸீஸ், உப செயலாளர் சீ.எம்.அன்வர் சதாத்,கல்முனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஏ.எம்.ஹனீபா,பீ.ரீ.ஜமால்,பவுண்டேஷன் உறுப்பினர் கள்,பள்ளிவாசல் நிருவாக உருப்பினர்கள்,நலன் விரும்பிகள்என பலர் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :