வாழைச்சேனை பாரிய தீப்பரவல் : சேத விபரம்



எஸ்.எம்.எம்.முர்ஷித், ஏறாவூர் சாதிக் அகமட்-
வாழைச்சேனை, கறுவாக்கேணி வீதியில் அமைந்துள்ள தனியார் வாகனத்தரிப்பிடமொன்றில் இன்று மாலை (18.07.2023) ஏற்பட்ட தீப்பரவல் சம்பவமொன்றின் போது மோட்டர் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டி உட்பட 40ற்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதன் போது முச்சக்கர வண்டி-1, மோட்டார் சைக்கிள்கள் -34, துவிச்சக்கரவண்டி-8 என 40 வரையிலான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களில் தீ பரவியதால் வெடிச்சத்தம் கேட்டதுடன், புகையுடன் கூடிய இருள் சூழ்ந்த நிலையில் தீ பரவல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் அச்சமடைந்து ஓடியதுடன், நிலவரம் அறிந்து பொதுமக்கள் தீயினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த அரச மற்றும் தனியார் பணியாளர்கள், மாணவர்கள் அவ்விடத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு பஸ்சில் பயணங்களை மேற்கொள்வது வழக்கமாகும்.

திடீரென ஏற்பட்ட இத்தீப்பரவல் சம்பவத்திற்கு காரணம் இதுவரை கண்டயறிப்படவில்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதில் பெறுமதி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் தீயில் அகப்பட்டு சாம்பலாகியுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் கவலைதெரிவிக்கின்றனர்.

வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை அடையாளங்கண்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைப்பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன் மற்றும் கிராம சேவக அ.பிரபு ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை அவதானித்தார்.

மின்சார சபையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மின்சார ஒழுக்கினால் ஏற்பட்ட தீ பரவலா என ஆய்வு செய்ததுடன் சம்பவ இடத்தில் பாதுகாப்பு கருதி மின் துண்டிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :