உலக வங்கியின் நிதியுதவியில் மன்னார் அகத்திமுறிப்பு குளம் புனரமைப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
லக வங்கியின் நிதி உதவியில் ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ செயற்திட்டத்தின் மூலம் மன்னார் சிலாவத்துறை நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட அகத்திமுறிப்பு குளப்புனரமைப்பு வேலைத்திட்டமானது கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் அவர்களினால் அண்மையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சுமார் 442.5 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்புச் செய்யப்படும் குறித்த வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்விற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஸ்ரான்லி டீமெல்,வவுனியா- மன்னார் பிராந்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர்,முசலி பிரதேசச் செயலகப் பிரதேசச் செயலாளர்,மன்னர் மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர், நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :