கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்



சர்ஜுன் லாபீர்-
ல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று (27) ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி கணக்காளர் கே.எம்
எஸ்.அமீர் அலி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ பாவா, திணைக்களங்களின் பிரதிநிதிகள்,முப்படைகளின் பிரதிநிதிகள் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அரசாங்கத்தின் அஸ்வெசும தேசிய திட்டத்தில் கல்முனை பிரதேச செயலக பிரிவில் உள்ள குறைபாடுகள் மற்றும் தற்போதைய நிலை சம்மந்தமாக கலந்தாலோசித்து முடிவடுக்கப்பட்டது. அத்துடன் கல்முனை கடற்படையின் தளத்திற்கான மேலதிக காணி விடுவிப்பு செய்தல்,நகர அபிவிருத்தி அதிகார சபையின் கோரிக்கைகள் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய குறைபாடுகள் போன்ற பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :