சாய்ந்தமருதில் தமிழ்மொழி மூலமான இளைஞர் விருது விழா போட்டி நிகழ்வுகள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ளைஞர், யுவதிகளிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு பொருத்தமான இடத்தை வழங்கும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 43வது தடவையாக நடாத்தப்படுகின்ற தேசிய இளைஞர் விருதுப் போட்டிகள் மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

15 வயத்திற்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்காக தமிழ்மொழி மூலமான அறிவிப்பாளர், பேச்சுப் போட்டி, இளம் பாடகர் போன்ற போட்டிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.

1994.03.24 ஆம் திகதிக்கு பின்னரும் 2008.03.24 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள் இப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என சாய்ந்தமருது பிரதேச செயலக இளைஞர் சேவை அலுவலகர் எம்.எம்.ஸமீலுல் இலாஹி (0772326068) அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :