" காணிக்கு குருநாதன்" நூல் வெளியீடு!



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாண குடியேற்ற உத்தியோகத்தர் தொழிற்சங்க ஏற்பாட்டில்
"காணிக்கு குருநாதன்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் கௌரவிப்பு விழாவும்
நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை(9) மாலை கல்முனை கிரிஸ்டா இல்ல மண்டபத்தில் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் எம்.ஆர்.எம் றஜாய் எழுதிய "காணிக்கு குருநாதன்" எனும் நூல் வெளியீட்டு நிகழ்வில் முன்னாள் உதவி காணி ஆணையாளர் கே.குருநாதன் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அம்பாறை மாவட்ட தலைமைப்பீட காணி உத்தியோகத்தர் கே.எம் முஸம்மில் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கல்முனை ,சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை ,பொத்துவில், லகுகல, பிரதேச செயலாளர்கள், உட்பட கிழக்கு மாகாண பேரவை உதவி செயலாளர் எம்.சி அன்சார், முன்னாள் உதவி காணி ஆணையாளர் கே.குருநாதனின் உறவினர்கள், நண்பர்கள் ,என பலரும் கலந்து கொண்டு நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.









 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :