உத்தியோகத்தர்களை பாராட்டி கெளரவிக்கின்ற நிகழ்வு..



நூருல் ஹுதா உமர்-
லங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஒய்வூதிய திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட அடைவைப் பெற்றுக் கொண்டமைக்காக சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுகளில் வழிநடத்திய கிளைகளின் தலைவர்கள் மற்றும் கிராம மட்டத்தில் அதிகளவான பங்களிப்பு செய்த உத்தியோகத்தர்களை பாராட்டி கெளரவிக்கின்ற நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா ஆகியோரின் தலைமையில் (17) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ. ஹமீட், கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு , நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.ஏ. சபீர், கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.ஐதாக், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.எம்.நளீம், ஜே.எம். றம்ஸா ஆகியோருக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :