இந்திய உதவியுடன் திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயம் புதுப்பொலிவு பெறும்! கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் நம்பிக்கை!



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுதசுவாமி ஆலயமானது இந்திய சோழர்கால வம்சத்தினருடன் இணைந்து புதுப்பொலிவு பெறும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தன்னை சந்தித்த ஆலய குழுவினரிடம் நம்பிக்கை தெரிவித்தார் .

திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான குழுவினருக்கும், ஆளுநருக்கும் இடையிலான இந்த சந்திப்பு நேற்று (20) வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அச்சமயம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம் , இந்துசமய ஆர்வலர்களான வி.ரி.சகாதேவராஜா, சுந்தரலிங்கம் முகுந்தன் (லண்டன்) ஆகியோர் உடனிருந்தனர்.

பரிபாலன சபை சார்பில் பொருளாளர் கே. கிருஷ்ணமூர்த்தி, கணக்குப்பிள்ளை எஸ்.லோகிதராஜா,பதில் செயலாளர் கே. சதீஷ்குமார், பணியாளர் கே.நடேச பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலய வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் எதிர்வரும் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 16 ஆம் தேதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைகின்றது. அதனையொட்டி இந்த கலந்துரையாடல் பெற்றது.
சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட பழம் பெரும் இவ் ஆலயம் தொடர்பான வரலாற்று விபரங்களை பரிபாலன சபையினர் எடுத்துரைத்தனர்.

பதிலுக்கு ஆளுநர் கூறுகையில்...

வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவத்தை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்யுங்கள் .ஏதாவது உதவி தேவைப்பட்டால் கூறுங்கள் . ஆலய உற்சவத்துடன் தொடர்புடைய அத்தனை திணைக்களம் மற்றும் நிறுவனங்களின் உதவி ஒத்தாசை நிச்சயமாக கிடைக்கும். இந்திய உதவியோடு இந்த ஆலயம் மேலும் புதுப்பொலிவு பெறும் என்று நம்பிக்கை இருக்கின்றது. உற்சவகாலத்தில் ஒரு நாள் நானும் விஜயம் செய்வேன். சந்திப்பதில் மகிழ்ச்சி. என்றார்.

இறுதியில் ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ்
"வரலாற்றில் முதல் தடவையாக வீர செயற்திறன் மிக்க தமிழ்மகனொருவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை எமக்கு பெருமகிழ்ச்சி. தங்களது காத்திரமான அர்ப்பணிப்பான சேவைகள் பணிகளுக்கு எமது நன்றிகள் வாழ்த்துகள். " என்று கூறி ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :