அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை பிரதேச வயல் நிலங்களை ஆக்கிரமித்துள்ள "கிலுகிலுபான்" எனும் பண்டி சம்பா நெல் இனம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர் விவசாய விரிவாக்கல் பிரிவு மற்றும் சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் பிரிவிற்குட்பட்ட பயிர் செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராகவுள்ள வயல் நிலங்களில் "கிலுகிலுப்பான் " எனும் பண்டிச் சம்பா இனம் மிகையாக வளர்ச்சியடைந்து பிரதான பயிர்களுக்கு சூரிய ஒளி செல்லுவதை தவிர்த்து , அதற்குரிய பசளைகளையும் உறிஞ்சி கதிர் பறிவதை குறைத்தும் வருகின்றது.

இதனால் விவசாயிகளின் இப் போக விளைச்சல் குறையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட விவசாய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி இந்த பண்டிச் சம்பா நெல் இனத்தை அடியோடு இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச விவசாயிகள் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :