மட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது வருட பூர்த்தியையொட்டி பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் மென்பந்து சுற்றுப்போட்டி!



றாவூர் சாதிக் அகமட் -
ட்டக்களப்பு - செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது வருட பாடசாலை தினத்தையொட்டி பழைய மாணவர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் தே.குகதாசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் - கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்கள் கலந்து கொன்டிருந்ததுடன் , மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான அவர்களும் , ஏறாவூர் பொலிஸார் பொறுப்பதிகாரி , செங்கலடி பிரதேச சபை செயலாளர் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

பாடசாலையின் பழைய மாணவர்களின் 22 அணிகள் கலந்து கொண்ட சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்றுப்போட்டி இன்று பாடசாலை மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 8 ம் திகதி ஆரம்பமான 22 அணிகள் பங்கு கொண்ட போட்டிகள் வார இறுதிநாள்களில் இடம்பெற்றவந்தது.

5 ஓவர் கொண்ட இறுதிப்போட்டிக்கு - 2014 ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர் அணியும் , 2019 ம் ஆண்டு உயர்தர பழைய மாணவர் அணியும் தெரிவாகி பலப்பரிட்சையில் ஈடுபட்டனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய 2019 உயர்தர அணி 5 ஓவர் முடிவில் 60 ஓட்டங்களைப் பெற்றனர். இதில் பிரவீன் , தனுசிகன் ஜோடி 25 பந்துகளுக்கு முகங்கொடுத்து 48 ஓட்டங்களைப்பெற்றனர்.

61 என்ற ஓட்டத்தை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய 2014ம் ஆண்டு உயர்தர அணி - போட்டியின் 5 ஓவர் முடிவில் 61 ஓட்டங்களைப்பெற்று 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டினர் - இதில் துடுப்பெடுத்தாடிய பரணி, முகுந்தன் ஜேடி 57 ஓட்டங்களைப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
போட்டியில் தொடர் ஆட்டநாயகன் விருதை ஐங்கரன் அவர்களும் , ஆட்ட நாயகனுக்கான விருதை பரணி அவர்களும் பெற்றிருந்தனர்.

இதே வேளை போட்டியில் வெற்றியீட்டிய 1ம் 2ம் 3ம் அணிகளுக்கான வெற்றிக்கோப்பையினை அதிதிகள் வழங்கி வைத்தார்.

மேலும் மைதானத்தில் பெண்கள் பழைய மாணவர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டியும் இடம்பெற்றது

குறிப்பிடத்தக்கது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :