அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் 6வது வருடாந்த மாநாடும் ஊடகவியலாளர் கெளரவிப்பும் தலைவர் கலாபூசணம் எம்.ஏ.பகுர்தீன் தலைமையில் அக்கரைப்பற்று எயிம்ஸ் சர்வதேச பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று ( 20) இடம்பெற்றது.
இதன் போது புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவததின் 24 படைப்பிரிவின் கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் விபுல சந்ரசிறி, தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கே.குணராசா ,தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை பேராசிரியர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
போரத்தின் உறுப்பினர்கள் கடந்த காலங்களில் ஊடகத்துறைக்கு வழங்கிய பங்களிப்புக்காக அதிதிகளினால் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டனர் .
0 comments :
Post a Comment