பிள்ளைகளுக்கு சின்னமுத்து தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள்.



நூருல் ஹுதா உமர்-
நாட்டில் தற்போது சின்னமுத்து (Measels) நோய் சிறுவர்களிடயே வேகமாக பரவிவருவதானால் குழந்தை பிறந்து 09 மாதங்கள் மற்றும் 03 வயதில் போடப்படும் தடுப்பு ஊசி ஏற்றிக்கொள்ளதவர்கள் உடனடியாக ஏற்றிக்கொள்ளுமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், திங்கட்கிழமைகளில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையிலும், செவ்வாய்க்கிழமைகளில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும், புதன்கிழமைகளில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் குறித்த தடுப்பு ஊசியை ஏற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சின்னமுத்து நோயிலிருந்து உங்கள் பிள்ளைகளை பாதுகாத்து கொள்ள இந்த தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :