சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் எதிர்கால திட்டங்கள், அஸ்வெஸ்ம வேலைத்திட்டம் தொடர்பில் தெளிவூட்டல் செயலமர்வு




நூருல் ஹுதா உமர்-

முர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் எதிர்கால திட்டங்கள், அஸ்வெஸ்ம வேலைத்திட்டம் தொடர்பில் திணைக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி வங்கி மற்றும் வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை, நிறைவேற்றுக் குழு தலைவர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு இன்று (30) அம்பரை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது

அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திருமதி பாக்கியராஜா, குறுநிதிப் பணிப்பாளர் மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஐ.அலியார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் அம்பாரை மாவட்டத்திலுள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி சங்க முகாமைத்துவப் பணிப்பாளர்கள், சமுர்த்தி வலய உதவியாளர்கள், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர்கள், சமுர்த்தி வங்கி, வங்கிச் சங்க கட்டுப்பாட்டுச் சபை, நிறைவேற்றுக் குழு தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :