கமநல அபிவிருத்தி திணைக்கள கிழக்கு மாகாணத்திற்குட்பட்ட மாவட்ட அணிகளுக்கிடையிலான கிறிக்கட் தொடரில் ஆண்கள் பிரிவில் மட்டக்களப்பு மாவட்ட அணியும் ,பெண்கள் பிரிவில் அம்பாறை மாவட்ட அணியும் சம்பியன்களாகின.



அஸ்ஹர் இப்றாஹிம்-
லங்கையில் முதல் தடவையாக கமநல அபிவிருத்தி திணைக்களம் ஏற்பாடு செய்து நடத்தும் கிறிக்கட் தொடரின் கிழக்குமாகாணத்திற்குட்பட்ட மாவட்ட அணிகளுக்கிடையிலான போட்டி மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் ,கே. ஜெகன்நாத் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள அம்பாறை , மட்டக்களப்பு , திருகோணமலை கமநல அபிவிருத்தி திணைக்களங்களை உள்ளீர்த்து ஆண் மற்றும் பெண்கள் பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் திருகோணமலை மாவட்ட, மட்டக்களப்பு மாவட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தியதில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள அணி 5 விக்கட்களால் அபார வெற்றியை பதிவு செய்து சம்பியனானதுடன் மகளிர் பிரிவில் இறுதிப்போட்டியில் அம்பாறை மாவட்ட , திருகோணமலை மாவட்ட அணிகள் பலப்பரீட்சை நடத்தி இருந்த நிலையில் அம்பாறை மாவட்ட அணி 2 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியனானது.

இச் சுற்றுத்தொடரில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்கள் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர்களாலும் உதவி ஆணையாளர்களாலும் வழங்கி வைக்கப்பட்டது.

இச் சுற்றுப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் சம்பியனாகிய அணிகள் கமநல அபிவிருத்தி திணைக்களம் தேசிய ரீதியில் நடத்தவுள்ள கிறிக்கட் தொடரில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :