காத்தான்குடி அல்- அக்ஸா குர்ஆன் மதரஸாவில் குர்ஆனை ஓதி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு




அஸ்ஹர் இப்றாஹிம்-
புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜூம்ஆ பள்ளிவாயலின் கீழ் இயங்கும் குர்ஆன் மதரஸாவில் புனித அல்-குர்ஆனை ஓதி முடித்து பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அல் அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.

அல்-அக்ஸா பெரிய பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னாள் நகரசபை உறுப்பினர் முகம்மது ஜவாஹிர், குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் உறுப்பினர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :