அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் பாடசாலையில் செயன் முறை தொழில்நுட்ப பாடத்தின் ஊடாக தரம் 10, 11 மாணவிகளால் பலவிதமான உணவுப் பண்டங்களும் பகல் உணவும் தயாரித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பகிர்ந்து உண்ணப்பட்டது.
செயற்பாட்டு ரீதியான கல்வி நடவடிக்கைகளில் மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமைகளை இந்நிகழ்வினூடாக வெளிக்கொணரப்பட்டது.
புத்தகக் கல்வியோடு மாத்திரம் நின்றுவிடாது செயற்பாட்டு ரீதியான கல்வி மூலம் வினைத்திறனான கற்றல் மாணவர்கள் மத்தியில் திறம்பட வெளிக்காட்டுகிறது.
இந்நிகழ்வின் ஊடாக ஏனைய மாணவர்களும் அவர்களது திறமை ஆற்றலினை கல்விச் செயற்பாட்டினை விருத்தி செய்ய இது ஓர் வழிகாட்டலாக அமையுமென பாடசாலை அதிபர் றிப்கா அன்ஸார் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment