சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் மனையியல் செயன்முறை




சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலையில் செயற்பாட்டு ரீதியில் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் மனையியல் கூடத்தில் செயல்முறை தொழில்நுட்பம்

அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் பாடசாலையில் செயன் முறை தொழில்நுட்ப பாடத்தின் ஊடாக தரம் 10, 11 மாணவிகளால் பலவிதமான உணவுப் பண்டங்களும் பகல் உணவும் தயாரித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பகிர்ந்து உண்ணப்பட்டது.

செயற்பாட்டு ரீதியான கல்வி நடவடிக்கைகளில் மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறமைகளை இந்நிகழ்வினூடாக வெளிக்கொணரப்பட்டது.

புத்தகக் கல்வியோடு மாத்திரம் நின்றுவிடாது செயற்பாட்டு ரீதியான கல்வி மூலம் வினைத்திறனான கற்றல் மாணவர்கள் மத்தியில் திறம்பட வெளிக்காட்டுகிறது.

இந்நிகழ்வின் ஊடாக ஏனைய மாணவர்களும் அவர்களது திறமை ஆற்றலினை கல்விச் செயற்பாட்டினை விருத்தி செய்ய இது ஓர் வழிகாட்டலாக அமையுமென பாடசாலை அதிபர் றிப்கா அன்ஸார் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :