அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளராக சாய்ந்தமருது ஏ.எம்.ஸாஹிர் நியமனம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை கல்வி மாவட்டத்தின் பொறியியலாளராக கல்முனை வலய பணிமனையில் கடமையாற்றிய சாய்ந்தமருதூரை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் பதவி உயர்வுபெற்று அம்பாரை மாவட்ட பிரதம பொறியியலாளராக நியமனம் பெற்றுள்ளார்.
கல்முனை கட்டடத் திணைக்களத்தில் பிரதம பொறியிலாளராக நீண்ட காலம் சேவையாற்றியுள்ளார்.

எதிர்வரும் 09.08.2023 புதன்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கடமையேற்பு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய அபிவிருத்தி சபையின் செயலாளராகவும், சாய்ந்தமருது நலன்புரி அமைப்பின்(SWF) செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

மேலும் இளைஞர்களின் கல்வி நடவடிக்கைகளிலும் அவ்வப்போது தனது பங்களிப்பை செய்து வருகின்றமை அவரது பணிகளில் ஒன்றாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :