அக்கரைப்பற்று பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியின் அன்பான வரவேற்பை பெற்ற அக்கரைப்பற்று முனவ்வரா கனிஷ்ட கல்லூரி மாணவர்கள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்விச் சுற்றுலாவின் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற அக்கரைப்பற்று முனவ்வரா கனிஸ்ட கல்லூரி மாணவர்களுக்கு பொலிஸாரால் எதிர்பாராத விதமாக கெளரவம் வழங்கப்பட்டது.

கல்விச் சுற்றுலாக்களின் போது மாணவர்களை பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதில் ஆசிரியர்கள் அவ்வளவு அக்கரை செலுத்துவதில்லை. இருந்தும் எந்தவிதமான அச்சமும் இன்றி பொலிஸ் நிலையம் பார்க்கச் சென்ற மாணவர்களை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.எஸ்.பி.விஜயதுங்க மற்றும் நிலையத்திலிருந்த பொலிஸ் அதிகாரிகள் மாணவர்களையும் அழைத்துச் சென்ற ஆசிரியர்களையும் அன்புடன் வரவேற்று, பொலிஸ் நிலைய நடவடிக்கைகளை மாணவர்களுக்கு காண்பித்தனர்.

இந்நிகழ்வின் போது பொலிஸ் உத்தியோஸ்தர்களான முஹம்மட் அனீஸ் மற்றும் தாஹிர் ஆகியோர் உடனிருந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவி புரிந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :