மாளிகைக்காடு சபீனாவில் சேவை நலன் பாராட்டு நிகழ்வு.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/சபீனா முஸ்லிம் வித்தியாலத்தில் ஆசிரியரகளாக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களான ஏ ஆர்.ஏ.றஷீட் மற்றும் திருமதி ஜெ. இஸ்மாலெவ்வை ஆகியோரின் சேவையைப் பாராட்டுமுகமாக ஆசிரியர் நலன்புரிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு நிகழ்வு இன்று பாடசாலையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹதுல் நஜீம் கொண்டதுடன் கௌரவ அதிதியாக காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே. டேவிட் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஓய்வு பெறவுள்ள காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே. டேவிட் அவர்கள் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போத்தி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கெளரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் பாடசாலை பிரதியதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :