திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு - பீடமாக தரமுயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு!



அபு அலா-
திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக கடந்த 2023.06.14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தரமுயர்த்தப்பட்டது. இதனை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு நாளை (18) காலை 9.00 மணிக்கு திருமலை வளாக சித்த மருத்துவ பீடத்தில் இடம்பெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு திருகோணமலை வளாக முதல்வர் பேராசிரியர் ச.தேவதாசன், சித்த மருத்துவ பீட பதில் பீடாதிபதி பேராசிரியர் சோ.சுதர்சன் மற்றும் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர்கல்வி அமைச்சு ஆகியவற்றின் அங்கீகாரத்துடன் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இவ்வலகினூடாக சித்த மருத்துவ கற்கைநெறி, பாரம்பரிய மருத்துவ நெறிகளை தற்போதைய நவீன சவால்களுக்கெற்ப ஆராய்ச்சியுடன் கூடியதாக கற்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சித்த மருத்துவ அலகு, இலங்கை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் கடந்த 2023.06.14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் சித்த மருத்துவ பீடமாக தரமுயர்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :