மாகாண பேரவைச் செயலாளராக கோபாலரத்தினம் கடமையேற்பு!


அபு அலா –

கிழக்கு மாகாண பேரவைச் செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்தினம் தமது கடமைகளை இன்று (13) பொறுப்பேற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டானினால் வழங்கப்பட்ட கடிதத்திற்கமைவாக பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயனாவினால் வழங்கி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயகா, மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எம்.எம்.மன்சூர், மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், விளையாட்டு திணைக்கள மாகாண பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் ஐ.எம்.றிக்காஸ் உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :