அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளுக்கு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் பயிற்சிக் கருத்தரங்கு.







எம்.எம்.றம்ஸீன்
-

கிழக்கு மாகாண அரச திணைக்களங்களில் அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளாக பணியாற்றுபவர்களுக்கு கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் பயிற்சிக் கருத்தரங்கொன்று நடாத்தப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற குறித்த பயிற்சிக் கருத்தரங்கில் அலுவலக சிற்றூழியர்கள், சாரதிகள் என 70பேர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம் பிரதம வளவாளராக கலந்துகொண்டு அலுவலக பணியாளர்களின் அரச கடப்பாடுகள், பொறுப்புக்கள் மற்றும் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பாக விரிவுரை நிகழ்த்தினார்.

இப்பயிற்சிக் கருத்தரங்கில் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திட்டத்தின் கீழ் அண்மையில் நிரந்தர நியமணம் கிடைக்கப்பெற்றவர்களும் கலந்துகொண்டார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :