ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" திட்டத்தின் கீழ் பாடசாலை உபகரணங்கள் வழங்கள்.


நூருல் ஹுதா உமர்-

"ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" என்ற மகுட வாசகத்தின் கீழ் இணைந்த கரங்கள் அமைப்பானது தனது கால் தடத்தைப் பதித்து, வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவச் செல்வங்களது கல்விச்செயற்பாடுகள், இடைநடுவே கைவிடப்படும் அவல நிலையை ஒழிக்குமுகமாக, நாடு முழுவதும் பரந்துபட்டளவில் செயற்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இணைந்த கரங்கள் அமைப்பினால் இம்முறை, பதுளை மாவட்டம் ஸ்பிரிங்வெளியில் அமைந்துள்ள ஊவா/ பது/மேமலை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு தனது கல்வி உதவிக் கரங்களை நீட்டியுள்ளது.

ஏறத்தாழ 150 இற்கும் மேற்பட்ட இம்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள், புத்தகப்பை என்பன வழங்கி வைக்கும் இந்நிகழ்வானது, பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையில் இடம்பெற்றது.

இணைந்த கரங்கள் இணைப்பாளர்களான சி. காந்தன், எம். ஜெகனாதன், திருமதி. எல்.சங்கீதா, திருமதி. ஏ. பங்கயற்செல்வி ஆகியோரது ஒருங்கிணைப்புடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோற்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :