பாடசாலை மாணவர்களின் சிகை அமைப்பில் ஒழுங்கு முறையை பேண நிந்தவூரில் கலந்துரையாடல்




அஸ்ஹர் இப்றாஹிம்-

மாணவர்களின் சிகை அமைப்பில் பாடசாலை ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்ட வகையில் நேர்த்தியான அமைப்பைக் கொண்டு வரும் நோக்குடன் பாடசாலை அதிபர்களுக்கும் சிகை அலங்கார நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நிகழ்வு நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வு பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் தலைமையில் சிறுவர் பெண்கள் பிரிவின் ஒருங்கமைப்பின் கீழ் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜெசான் , திட்டமிடல் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, கோட்டக் கல்வி அதிகாரி, பொலிஸ் அதிகாரி, பாடசாலை அதிபர்கள்,பள்ளிவாசல் தலைவர்கள், சிறுவர் பெண்கள் பிரிவை சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களின் உரிமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :