கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீட் கிழக்கு மாகாண பிரதி கல்விப் பணிப்பாளரால் கெளரவிப்பு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட ,கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீட் உடற்கல்வித் துறைக்கான கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளரும், கந்தளாய் வலயக் கல்விப் பணிப்பாளருமான ஈ.ஜி.பி.தர்மதிலக அவர்களினால் விசேட கெளரவம் பெற்றார்

அண்மையில் நடந்து முடிந்த முதலாவது சர்வதேச மாஸ்டர் சம்பியன் சிப் விளையாட்டுப் போட்டியில் 400 மீற்றர், 100 மீற்றர் மற்றும் தடைதாண்டல் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றுக் கொண்டமைக்காகவே இந்த கௌரவம் வழங்கப்பட்டது .

அத்துடன் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பதக்கம் வென்ற ஒரே வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெறவுள்ள 22 வது ASIAN MASTERS ATHELETICS CHAMPIONSHIPS - 2023 போட்டியிலும் இவர் பங்குபெறவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :