உயர்தர வர்த்தக துறை மாணவர்களுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் செயலமர்வு



அஸ்ஹர் இப்றாஹிம்-
க.பொ.த.உயர்தர வர்த்தக துறையில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வித் துறையினை மேலும் வலுவூட்டும் வகையிலும், பல்கலைக்கழகங்களுக்கு அத்துறையில் அனுமதி பெறுவதற்கான நுட்பங்களையும் அறிந்து கொள்ளும் வகையிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களின் வழிகாட்டலிலும் ஆலோசனையின் பேரிலும் பல்கலைக்கழக சந்தைப்படுத்தல் திணைக்களத்தின் தலைவர் ஏ.எல்.எம்.ஏ.சமீம் அவர்களின் வழிகாட்டலில் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் உயர்தர வர்த்தக பிரிவு மாணவர்களுக்கான செயலமர்வொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இச் செயலமர்வில் கல்முனை கார்மல் பற்றிமா தேசிய கல்லூரி, பொத்துவில் முஸ்லிம் தேசிய கல்லூரி மற்றும் பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரி ஆகிவற்றின் மாணவர்களும் துறைசார் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :