அட்டாளைச்சேனை மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலைகளுக்கு பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் விஜயம்



றியாஸ் ஆதம்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அட்டாளைச்சேனை மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலைகளில் நடைபெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களைக் கண்காணிப்பதற்காகவும் பொதுமக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் கருத்துக்களை கேட்டறிந்துகொள்வதற்காகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை (16) குறித்த வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் துரிதமாக ஆரம்பிக்கப்படவுள்ள பிராந்திய மருந்து விநியோக பிரிவின் வேலைத்திட்டங்களையும் பணிப்பாளர் மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட குழுவினர் இதன்போது பார்வையிட்டனர்.

குறித்த வைத்தியசாலைகளில் நடைபெறுகின்ற கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இதன்போது உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :