நிலநடுக்கம் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மொரோக்கோ மற்றும் லிபிய மக்களுக்கு கொழும்பில் விஷேட துஆப்பிரார்த்தனை !



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ண்மையில் மொரோக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினாலும் மற்றும் லிபியாவில் இடம் பெற்ற வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், மொரோக்கோ, லிபியா நாடுகள் வெகு விரைவில் வழமையான நிலைக்குத் திரும்பவும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வு கொழும்பு தெவட்டகஹ அஷ்-ஷெய்க் உஸ்மான் வலியுல்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று (15) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ரியாஸ் சாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
காயிப் ஜனாஸா தொழுகையை சங்கைக்குரிய அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் அப்துல் கரீம் தங்கள் அல்-ஐய்துரூஸி அவர்கள் நடாத்தியதுடன் விஷேட துஆ பிரார்த்தனையை அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலனா அல்-காதிரி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஸாதாத்மார்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் உட்பட பெரும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :