அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடமை சார் விஜயம் .


கல்முனை நிருபர்-

ம்பாறை மாவட்டத்தின் சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பதில் சமுர்த்தி பணிப்பாளர் கடமைக்காக அலுவலக விஜயத்தினை (15)வெள்ளிக்கிழமை மேற்கொண்டு இருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் கருத்தரங்கினை நடத்தியிருந்தார். 

(16)சனிக்கிழமை அன்று ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுகளில் காணப்படுகின்ற முயற்சியான்மை பயனாளிகளின் வாழ்வாதார வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்காக கள விஜயம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ஆரையம்பதி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் கே.நவரஞ்சன் அவர்களும் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எம்.புவிராஜ் அவர்களும் அரையம்பதி வங்கி வலய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது முயற்சியான்மை பயனாளிகளுக்கு பலதரப்பட்ட விளக்கங்களும் தெளிவூட்டல்களும் தங்களுடைய தொழில்சார் நடத்தைகள் தொடர்பாகவும் கணக்கு வைப்புக்கள் தொடர்பாகவும் மக்களுக்கும் சமுர்த்தி வங்கிகளுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகள் போன்றவற்றினையும் விளக்கி இருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :