மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி மாணவர் சக்தி அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு

எம்.என்.எம்.அப்ராஸ்-

முர்த்தி மாணவர் சக்தி (சிசுபல) சமூக நலன்கள் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சமுர்த்தி வங்கிச்சங்க முகாமைத்துவ பணிப்பாளரின் தலைமையில் இன்று(18) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பிரதேச செயலாளர் தட்சணகௌரி தினேஸ் அவர்களும் விசேட அதிதியாக உதவி பிரதேச செயலாளர் மேனகா புவிக்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் இந்த நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர்,சமுர்த்தி வங்கி முகாமையாளர்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது 100 மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :