கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் மூலம் புதிய நவீன போட்டோ பிரதி (Photocopy) இயந்திரம் கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலத்திற்கு கையளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் திருமதி. எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யாவின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலைக்கான புதிய நவீன போட்டோ பிரதி இயந்திரம் YWMA & CSMWA பேரவைகளின் ஒருங்கிணைப்பில் ,கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களிடம் வைபவரீதியாக விஷேட காலை ஆராதனையின்போது கையளித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் ஓர் அங்கமாக கோட்டமட்ட சிறுவர் தடகளப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற தரம் 03 ஆண், பெண் மாணவர்கள் மற்றும் தரம் 04 ஆண் மாணவர்களுக்கும் இந்நிகழ்வின் பிரதம அதிதியான ரஹ்மத் மன்சூரினால் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் இதன்போது பவுண்டேசன் அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :