கல்முனை ,சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேசங்களில் கரைவலை மீன்பிடியாளர்களுக்கு பெருமளவில் கீரி மீன் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை.


அஸ்ஹர் இப்றாஹிம்-

ல்முனை பிரதேச கரைவலை மீனவர்களுக்கு கடந்த ஒருவார காலமாக தமது வலையில் அதிகளவில் கீரிமீன் பிடிக்கப்படுவதால் மிகவும் மகிழ்ச்சியடைவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கடந்த வருடங்களைப் போலல்லாது இவ்வருட இறுதிப் பகுதியில் தினசரி அதிகளவில் மீன்கள் பிடிக்கப்படுவதால் தமது பொருளாதார நிலமையை சற்று சீர் செய்யக்கூடியதாக உள்ளதுடன், இம் மீன்களை கொள்வனவு செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசத்தில் வசிக்காத மக்கள் கடற்கரைப் பிரதேசத்திற்கு வந்து அதிகளவில் மீன்களை கொள்வனவு செய்வதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கல்முனை, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு பிரதேச கடற்கரையோரம் பாரிய கடலரிப்பிற்கு உள்ளாகியுள்ள போதிலும் கரைவலை மீனவர்கள் மிகவும் உட்சாகமாக தினசரி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிடிக்கப்படும் மீன்கள் கொழும்பு, கண்டி,நுவரெலியா மற்றும் குருநாகலை போன்ற இடங்களுக்கு அனுப்பப்படுவதுடன் மேலதிக மீன்களை கருவாடாக மாற்றும் முயற்சியிலும் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :