அஸ்ஹர் இப்றாஹிம்-
கொழும்பிலிருந்து கட்டுநாயக ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
கட்டுநாயகவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (23) இரவு விபத்து இடம்பெற்ற இடத்தில் பிரதேசவாசிகளினால் அமைதியின்மை ஏற்பட்ட போதிலும் பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து சம்பந்தமாக கட்டுநாயக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment