கல்முனைபிராந்திய மருத்துவ சேவைகள் அதிகாரியாக சாய்ந்தமருது டொக்டர் ஸைகிலா இஸ்ஸடீன் கடமையேற்பு




அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது டொக்டர் ஸைகிலா இஸ்ஸடீன் கல்முனை பிராந்திய மருத்துவ சேவைகள் அதிகாரியாக கடமையேற்றுக் கொண்டார்.
இவரே முதலாவது பெண், கல்முனை பிராந்திய மருத்துவ சேவைகள் அதிகாரியாக கடமையேற்றவர்.

மருத்துவ துறையில் 35 வருட சேவைக் காலத்தை கொண்ட இவர் சாய்ந்தமருதின் முதலாவது பெண் எம்.பி.பி.எஸ் மருத்துவ கலாநிதியும், மருத்துவ நிர்வாகத்துறையில் முதலாவது முஸ்லிம் பெண் நிர்வாக உத்தியோகத்தரும் ஆவார்.

சாய்ந்தமருது முன்னாள் மரண விசாரணை அதிகாரி மர்ஹும் ராசிக் காரியப்பரின் புதல்வியும், கல்முனைப் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற டொக்டர் டாக்டர்.ஏ. இஸ்ஸடீன் அவர்களின் துணைவியாருமாவார்.ஆவார்.

சாய்ந்தமருது வைத்தியசாலை, சாய்ந்தமருது மருத்துவ சுகாதார அதிகாரி, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் நிந்தவூர் தள வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றி நிறுவனம் சார்பான போட்டிகளில் பங்கு பற்றி பல வெற்றிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :