சாய்ந்தமருதில் சிவில் பாதுகாப்பு குழுவின் ஒன்றுகூடல்.


நூருல் ஹுதா உமர்-

சாய்ந்தமருது 08ம் பிரிவின் சிவில் பாதுகாப்பு குழுவின் ஒன்றுகூடல் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பரிசோதகர் வை.பி. அய்யூப் தலைமையிலும் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ். அக்பர் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் 2023.10.11 அன்று சாய்ந்தமருது அல்-ஜலால் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது 08ம் பிரிவின் கிராம நிலதாரி எ. நஜீபா, சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் அபுல் ஹசன், உப தலைவர் எஸ். ஏ. முஹம்மட் அஸ்லம், நிர்வாக உத்தியோகத்தர்கள், பொதுநிறுவன தலைவர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தற்காலத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் குற்றங்கள் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :