கல்முனை மாநகர சபையில் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு பிரியாவிடை



ஏ.எஸ்.மெளலானா, யூ.கே.காலிதீன்-
ல்முனை மாநகர சபையில் ஊழியர்களாக கடமையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் கே.கந்தசாமி, ஐ. இராமச்சந்திரன் ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று திங்கட்கிழமை (16) மாலை நடைபெற்றது.

மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், சுகாதாரப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம்.இஸ்ஹாக் ஆகியோர் குறித்த இரு ஊழியர்களினதும் நீண்ட கால அர்ப்பணிப்பு நிறைந்த உன்னத சேவைகள் பற்றி எடுத்துரைத்து, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரிவுத் தலைவர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :