அம்பாறையில் விஷேட தேவையுடையோர்கள் தொடர்பில் சமூகத் தலைவர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

வி
ஷேட தேவையுடையோர்களை சமூகமயப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கு சிறந்த சமூக மனப்பாங்கினை கட்டியெழுப்புதல் சம்பந்தமாக சமூகத் தலைவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

அம்பாறை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சமாதி அகலதொடுவ தலைமையில் நடந்த மேற்படி நிகழ்வில் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் சுணில் குணரெட்ண கலந்து கொண்டார்.

டச் லங்கா பிரனட்சிப் பெளண்டேசனுடன் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஊனமுற்றோரின் சட்ட நிலை, அவர்கள் பெறும் சேவைகள், தொடர்பு செயல்முறை சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள கரங்காவ, கெமுனுபுர, திஸ்ஸபுர, நவகம்புர, மிஹிதுபுர, சத்தாதிஸ்ஸபுர ஆகிய கிராம சேவகர் பிரிவிலுள்ள விஷேட தேவையுடையோர்கள் தொடர்பாக இந்த செயலமர்வில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக சேவை அலுவலகர்கள், கிராம சேவை உத்தியோஸ்தர்கள் மற்றும் சமூக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :