சமூக பொலிஸ் குழுவில் இணைந்த புதிய அங்கத்தவர்களை வரவேற்கும் நிகழ்வு.


எம்.ஏ.ஏ.அக்தார்-

ல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி - 14 ஆம் கிராம சேவகர் பிரிவில் இயங்கும் சமூக பொலிஸ் குழுவின் கிராம சேவகர் பிரிவின் சமூக பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலும் புதிதாக குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்ட அங்கத்தவர்களை வரவேற்கும் நிகழ்வும் கல்முனைக்குடி - 14 சமூக பொலீஸ் குழுவின் தலைவர் முஸ்தபா முபாரக் தலைமையில் கல்முனை மஹ்மூத் மகளிர் தேசியக் கல்லூரியில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ. வாஹீத், விஷேட அதிதியாக கல்முனைக்குடி - 14 கிராம சேவகர் பிரிவு பொலிஸ் பொறுப்பாதிகாரி டி.எம்.ஏ. அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூக பொலிஸ் குழுவில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அங்கத்தவர்கள் அறிமுகம், கிராம சேவகர் (14) பிரிவின் கீழ் அமையப்பெற்றுள்ள கல்முனை மஹ்மூத் மகளிர் தேசிய கல்லூரி மாணவிகள் மற்றும் பிரதேச சமூக பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகள், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள் பாவனைகள், சிவில் குற்றங்கள், முரண்பாடு, குடும்ப பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட தலைப்புக்களை அடிப்படையாக கொண்டு கலந்துரையடப்பட்டன.

மேலும் சமூக பாதுகாப்பு நிறுவனமான குடும்பம், பாடசாலை, சமய நிறுவனம், சமூக நிறுவனம் வகிபாகம், ஏதிர்காலத்தில் சமூகத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பு இடையிலான சமூக இடைவினையை அதிகரித்தல், பாடசாலை மாணவ, மாணவிகள் ஒழுக்கம், வீதி போக்குவரத்து விதி முறை தெளிவுபடுத்தல், சமூக பாதுகாப்பினை மேன்படுத்துவதற்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துதல், சமூக சேவை திட்டங்கள், பொது சிரமதான பணிகள் நடைமுறைப்படுத்தல் போன்ற தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன.

நிகழ்வின் இறுதியில் குழு அங்கத்தவர்கள் ஆலோசனைகள் கருத்துக்கள் சமூக பொலிஸ் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ. வாஹீத் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள், கல்முனைக்குடி - 14 சமூக பொலிஸ் குழுவின் பிரதித் தலைவர், உப செயலாளர், குழு உறுப்பினர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :